Type Here to Get Search Results !

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.



 காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், மன்ஷகாம் என்ற இடத்தில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்புக்கும் நடந்த மோதலில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அடில் அஹமது என்ற அபு இப்ராஹிம் மற்றும் ஷாகின் பசீர் டோக்கர் என தெரியவந்தது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் மீது ஈர்ப்பு கொண்டு செயல்படும் ஐஎஸ்ஜேகே என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. வானி, கடந்த 2017 செப்., 12 முதல் பயங்கரவாத அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறான். டோக்கர், கடந்த ஆண்டு ஆக., முல் அந்த அமைப்பில் உள்ளான். அதற்கு முன்னர் லஷ்கர் அமைப்பிடம் பயிற்சி பெற்றுள்ளான்.

பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ள ராணுவத்தினர், பொது மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துவிட்டு தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.