Type Here to Get Search Results !

9 வயது சிறுமியின் உடல் இன்று அடக்கம்… புதுச்சேரியில் பதற்றம்

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுவதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

9 வயது சிறுமியின் உடல் இன்று அடக்கம்... புதுச்சேரியில் பதற்றம் 9 வயது சிறுமியின் உடல் இன்று அடக்கம். புதுச்சேரியில் பதற்றம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதனால், சிறுமியின் பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சோலை நகரில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், காணாமல் போன சிறுமி சோலைநகரில் சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்தார். மேலும் சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் பரவியதால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பதற்றம் நிலவியது. இதனால், கும்பலைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று காலை அடக்கம் செய்யப்படவுள்ளது. பாப்பம்மாள் கோவில் மயானத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக சிறுமியின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டு சிறுமியின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இப்பிரச்னையால் புதுச்சேரியில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


AthibAn Tv WHATSAPP சேனலில் இணைய

வாட்ஸ்அப் சேனல் மூலம் இணையும் போது உங்கள் தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது, Green பட்டனை தொடவும் .

TELEGRAM TO FOLLOW சேனலில் இணைய

மேலும் தந்திச் செய்தி மூலம் முக்கிய தகவலுக்கு Red பட்டனை தொடவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom