தமிழக சட்டபேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத்த தேர்தலின் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகின.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 156 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பதிவில் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், " மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.
தேசிய வளர்ச்சிக்கும், மாநிலங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், கொரோனா தொற்றுநோய பாதிப்பிலிருந்து மீளவும் இணைந்து செயல்படுவோம்" என தெரிவித்துள்ளார்.
Congratulations to Thiru @mkstalin and @arivalayam for the victory in the Tamil Nadu assembly elections. We shall work together for enhancing national progress, fulfilling regional aspirations and defeating the COVID-19 pandemic.
— Narendra Modi (@narendramodi) May 2, 2021
AthibAn Tv