பாண்டிகோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் நடக்கும் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதிமுக வேண்டும்; திமுக வேண்டாம் எனக்கூறும் தேர்தல். நிலங்களை பார்த்து குடிமராமத்து செய்யும் நல்லாட்சி அதிமுக வேண்டும். நில அபகரிப்பு செய்யும் திமுக வேண்டவே வேண்டாம் எனக்கூறும் தேர்தல்.
திமுகவை மக்கள் கைவிட்டுவிட்டார்கள். காங்கிரசை கைகழுவிவிட்டார்கள். தமிழகத்திற்கு பிரதமர் ஏராளமான நன்மைகளையும் கோடிக்கணக்கான திட்டங்களை அறிவித்து உள்ளார். தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் அமைய அனுமதி கொடுத்தவர் பிரதமர். 1500 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர அனுமதி புரிந்தவர் மோடி. தமிழக மக்கள், திமுக.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிமுக ஆட்சியில், இந்தியாவில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. நமது தலைமுறையினர் நன்றாக இருக்க அதிமுக அரசு அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி பேசியதாவது: அதிமுக கூட்டணி வலிமையான வெற்றி கூட்டணி. தமிழகம் வளர்ச்சி பெற மத்திய அரசு பல்வேறு வகையில் உதவி செய்கிறது. இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் பெருமை பிரதமரை சேரும் வல்லரசு நாடுகள், கொரோனா வைரசை தடுக்க தடுப்பூசியை கண்டறியாத சூழ்நிலையில், பிரதமரின் கடும் உழைப்பால், ஊக்கத்தால், விஞ்ஞானிகள் கடும் முயற்சியில், ஒரே ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை பிரதமர் நிரூபித்து உள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முதன்மையாக பணியாற்றினார்.
தமிழகத்திற்கு நிதி, திட்டங்கள் கிடைக்கிறது. நமது வாக்குறுதிகள் நிறைவேற்ற காரணம், மத்திய அரசு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதே காரணம். இதனால், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன. தமிழகத்தை தொழில்வளம் மிக்க மாநிலமாக ஜெயலலிதா அடித்தளம் அமைத்தார். அதேவழியில் அதிமுக அரசு செயல்படுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புஏற்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகள் அமைக்க ஏராளமான சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. மக்களுக்கு நன்மை செய்யும் அரசு மத்தியிலும் மாநிலத்திலும் செயல்படுகிறது.
திமுக.,வை கட்சி என கூறுவதைவிட கார்ப்பரேட் கம்பெனி எனக்கூறலாம். இங்கு நீக்கப்பட்டவர்கள், கம்பெனியில் சேர்ந்து தேர்தலில் நிற்கின்றார்கள். திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி. மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி அல்ல. அதிமுக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி. மக்களுக்கு உழைக்கும் கட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
AthibAn Tv