Type Here to Get Search Results !

தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 1ம் தேதி வரை வறண்ட வானிலை


தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 1ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை: வட உள் கர்நாடகாவில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வழியாக தென் கேரளம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக,

இன்று(ஏப்.,27) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

ஏப்.,28: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்

29 ம் தேததி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்

ஏப்.,30 மற்றும் மே 1ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியதை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில், வேதாரண்யத்தில் 4, நிலக்கோட்டையில் 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom