Type Here to Get Search Results !

எனது (ஓ பன்னீர்செல்வம்) வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது

 

சென்னை விமான நிலையம் வந்த துணை முதல்வர் ஓபிஎஸ்-யை செய்தியாளர் கேள்வி கேட்டபோது இந்த மாதிரி கேள்வி கேட்கக் கூடாது என அதிமுக நிர்வாகி ஒருவர் மிரட்டுவது போல் கூறியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இன்று மதுரையில் இருந்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்று, மாலை 4.00 மணி முதல் சென்னையில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை பற்றி கேட்டதற்கு, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது என தெரிவித்தார். அப்போது துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை வரவேற்க வந்த அதிமுக நிர்வாகி ஒருவர் செய்தியாளரை பார்த்து அந்த மாதிரி கேள்வியே கேட்க கூடாது என மிரட்டும் தொனியில் கூறினார்.

மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்து உள்ளது என திமுகவினர் வைக்கும் குற்றச்சாட்டை பற்றி கேட்டதற்கு ஓ பன்னீர்செல்வம் மௌனமாக சென்றார். போடி தொகுதியில் ஓபிஎஸ்சை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களம்காண்கிறார். இந்நிலையில் அவர் ஓபிஎஸ்சுக்கு கடும் சவால் கொடுப்பார் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போடி தொகுதியில் ஓபிஎஸ் அவ்வளவு எளிதில் வெற்றிபெற்றுவிட முடியாது என்ற நிலை உள்ளது குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom