Type Here to Get Search Results !

அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம்... நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்


தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்தில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

அதில், எல்ஐசி மற்றும் யுனைடட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டம் துவக்கப்படுகிறது.

இதற்கான செலவுத் தொகையை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். 

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 55.67 இலட்சம் தகுதியான குடும்பங்களுக்கு, குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும், குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும், நிரந்தர இயலாமைக்கு 2 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom