Type Here to Get Search Results !

அவதூறு பரப்பிய 4 பேர் ரஜினி மக்கள் மன்ற பொறுப்பில் இருந்து நீக்கம்


நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காதது குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய 4 பேர் ரஜினி மக்கள் மன்ற பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் கட்சி தொடங்குவதாக அறிவித்து இருந்த நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் மாத இறுதியில் கட்சி தொடங்கப்போவது இல்லை என்று அறிவித்தார்.

உடல் நிலை மற்றும் வயது காரணமாக பிரச்சாரத்திற்கு சென்று மக்களை சந்திக்க முடியாத நிலையில் இருப்பதால் அரசயலில் ஈடுபட மாட்டேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். அத்துடன் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவாக அவர் வாய்ஸ் கொடுக்கவில்லை. ரசிகர்கள் விருப்படி செயல்படலாம் என்று கூறிவிட்டார். இதன்படி ரசிகர்கள் விரும்பிய கட்சிகளில் சேர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காதது குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய 4 பேர் ரஜினி மக்கள் மன்ற பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்..

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்பட்டதால், கன்னியாகுமரி மாவட்ட துணை செயலாளர் ராஜன் உட்பட நான்கு பேர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிககப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom