Type Here to Get Search Results !

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா டிடிவி.தினகரன் உறுதி... காரில் அதிமுக கொடி பொருத்த எல்லா உரிமை உண்டு


பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்த எல்லா உரிமையும் உள்ளது. அதில், எந்த சர்ச்சையும் இல்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்பதால் தான் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது. சட்டப்போராட்டம் தொடரும். அதிமுகவை ஜனநாயகமுறையில் மீட்டெடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. அமமுகவை ஆரம்பித்ததே ஜனநாயகமுறையில் தேர்தலில் வென்று அதிமுகவை மீட்டெடுக்கத்தான் என விளக்கமளித்துள்ளார். 

மேலும், பெங்களூர் புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகே உள்ள கோடாகுருக்கி பண்ணை வீட்டில் சசிகலா தங்கியுள்ளார். சசிகலாவை ஒரு வாரம் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் திரும்ப திட்டமிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom