தமிழகத்தில் பாஜக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசினார். அப்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து பாஜக சந்திக்கும் என அறிவித்தார்.
முன்னதாக தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக உயர்மட்டக்குழுவுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்களை சந்தித்தார். மாலையில் பொதுக்கூட்டம் முடிந்த பிறகு நேற்றிரவு கட்சி நிர்வாகிகளுடன் நட்டா ஆலோசனை நடத்தினார்.
அப்போது நட்டா பேசுகையில், அரசியலில் பாஜகவினர் மற்ற கட்சியினரை விட வித்தியாசமாக செயல்பட வேண்டும். பாஜகவினர் மக்களை வித்தியாச முறையில் அணுகி மத்திய அரசின் சாதனைகளை சொல்ல வேண்டும்.
தேர்தலின் போது பாஜகவினர் செயல்பாடுகளை கூட்டணி கட்சியினரிடமும் கேட்டு தெரிந்து கொள்வேன். கட்சிக்குள்ளே அரசியல் செய்யாமல் எதிர்கட்சிகளுடன் போராடி தேர்தலில் வெற்றி பெற வியூகங்கள் அமைத்து செயல்பட வேண்டும் என்றார்.
பின்னர், மதுரையில் இருந்து புதுச்சேரிக்கு சென்றார்.
AthibAn Tv