Type Here to Get Search Results !

இந்தியாவின் முதல் பட்ஜெட் எப்போது யாரால் தாக்கல் செய்யப்பட்டது....?


இந்தியாவின் முதல் பட்ஜெட் 1860-ம் ஆண்டு, ஏப்ரல் 7-ம் தேதி ஜேம்ஸ் வில்சன் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது. இவர் ஒரு பொருளாதார இதழின் நிறுவனர் ஆவார்.

இந்திய வைஸ்ராயின் ஆலோசனைக்கு இணங்க, இந்திய கவுன்சிலின் உறுப்பினராக ஜேம்ஸ் வில்சன் இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

ஜேம்ஸ் விலஸன் தான் 1853-ம் ஆண்டு சார்டட் வங்கியை தொடங்கினார். அதுதான் நாளடைவில் ஸ்டாண்டர்ட் சார்டட் வங்கியாக உருமாறியுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை, தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.ஷண்முகம் ஷெட்டி 1947-ம் ஆணடு நவம்பர் 26-ம் தேதி தாக்கல் செய்தார். அப்போதைய மொத்த பட்ஜெட் அளவு 197.29 கோடி ரூபாய். அதில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 92.47 கோடி ரூபாய். அந்த பட்ஜெட்டின் நிதி பற்றாக்குறை 24.59 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom