Type Here to Get Search Results !

மோடி அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது.... மம்தா, தனது உறவினருக்காக ஆட்சி செய்து வருகிறார்.... அமைச்சர் அமித்ஷா


மேற்கு வங்க மாநில மக்களை முதல்வர் மம்தா தோற்கடித்து விட்டார். திரிணமுல் தலைவர்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர். தேர்தல் வரும் போது மம்தா தனித்து விடப்படுவார். மாநில மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறார். பல துறைகளில் மாநிலத்தை பின்னோக்கி தள்ளியுள்ளார். அவரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மோடி அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது. ஆனால், மம்தா அரசு, உறவினருக்காக உழைத்து வருகிறது. இவ்வாறு அவுர் பேசினார்.

இந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில், சுயநலத்திற்காக மத்திய அரசுடன் மோதலில் ஈடுபடுவதுடன், தங்களுக்குள்ளே மோதிக்கொள்ளும் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை அவமதிக்கும் கட்சியில் தேசபக்தி மிக்க ஒருவர், ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டார்கள். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின் போது, பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு 8 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இங்கு திரிணமுல் தலைவர்கள் அதில் முறைகேட்டில் ஈடுபட்டனர். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom