Type Here to Get Search Results !

தமிழகத்தில் ரூ.52,257 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்


முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 34 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தமிழ்நாடு அரசின் புதிய தொழில் கொள்கையான “தமிழ்நாடு தொழில் கொள்கை 2021” வெளியிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 34 திட்டங்களில் 52,257 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 93,935 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டதாகும். 

மேற்படி முதலீடுகள் பெரும்பாலும், மின்னணுவியல், மின் வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகன மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி, சூரிய சக்தி மின்கல உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom