ராஜஸ்தான் மாநிலம் பார்பர் மாவட்டத்தில் உள்ளது தேரசர் எனும் கிராமம். 600பேர் வாழும் இந்த கிராமத்தில் விசித்திர பழக்கம் ஒன்று நடைமுறையில் உள்ளது. அந்த கிராமத்தில் வசிக்கும் எல்லா ஆண்களுக்கும் 2 மனைவிகள் உள்ளனர்.
2வது திருமணம் செய்யும் மனைவிக்கு மட்டுமே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.இது அவர்களின் கலாச்சாரம் ஆகும். இஸ்லாமிய மக்களும் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். அவர்களும் இந்த கலாச்சாரத்தையே பின்பற்றி வருகின்றனர்.
இந்த கிராமத்தில் வாழும் முதல் மனைவியை திருமணம் செய்தால் இரண்டாவது மனைவியையும் கட்டாயம் திருமணம் செய்ய வேண்டும். முதல் மனைவிக்கு குழந்தை பிறப்பதில்லை.
குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் 2வது திருமணம் செய்ய வேண்டும். அந்த மனைவி மூலமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். முதல் மனைவி மூலம் குழந்தை பெற முயற்சித்தாலும் அது முடியாது என கிரம வாசிகள் கூறினர்.
AthibAn Tv