உ.பி.,யின் மொராதாபாத் மாவட்டத்தில், மொராதாபாத் - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் மினிபஸ்சும் - டிரக்கும் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும், அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானாவின் மெகாபூப் நகர் அருகே மணப்பெண் அழைத்து சென்ற வேன் விபத்தில் சிக்கியதில், மணப்பெண் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.
AthibAn Tv