Type Here to Get Search Results !

பண்ருட்டி அருகே ரைஸ்மில் உரிமையாளர் வீட்டில் வருவமானவரித்துறையினர் சோதனை



பண்ருட்டி அருகே ரைஸ்மில் உரிமையாளர் வீட்டில் வருவமானவரித்துறையினர் நேற்று இரவு முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் சேர்ந்தவர் சுகிசந்திரன். நிலக்கிழார், ரைஸ்மில் உரிமையாளர். இவரது மகன் முத்துகுமார்(37); இவர் சென்னையில் உள்ள பாலம் கட்டுமான பணியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தங்கை பவித்ரா. பவித்ராவின் கணவர் ராம்பிரசாத்(35); இவர் மும்பையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். ஐ.டி.கம்பெனியில் கோடி கணக்கான பணம் வரிஏய்ப்பு செய்ததாக தெரிகிறது. முத்துகுமார் சேகர் ரெட்டியின் நெருக்கமானவர் எனவும், பண மதிப்பிழப்பின் போது முத்துகுமார் மூலமாக தான் புதிய பணம் மாற்றியதாக கூறப்படுகிறது

சுகிசந்திரன் குடும்பத்தினர் வசதி குறைவாக இருந்த நிலையில் அதிக அளவில் சொத்து குவித்ததாகவும், இதனால் வருமானவரித்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.மும்பையில் உள்ள ராம்பிரசாத் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அதுபோல் பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள ராம்பிரசாத்தின் மாமனார் வீட்டில் சோதனை நடத்திட வருமானவரித்துறையினர் நேற்று வந்தனர்.ஆனால் சுகிசந்திரன் உள்ளிட்டோர் வெளியூர் சென்று திரும்பிய உடன் இரவு 10:30 மணியளவில் வருமான வரித்துறையின் கீழ் 9பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.நேற்று துவங்கிய சோதனை இன்று மதியத்திற்கு மேலும் நீடித்தது.

சோதனை நடைபெற்று வரும் பண்ருட்டி- பாலுார் மெயின்ரோட்டில் பண்ருட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom