திமுக கபட நாடகம் போட ஆயத்த வேலையில் இறங்கி உள்ளது. இந்து மக்களாகிய தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் கட்சி திமுக என்று ஒருபக்கம் சொல்லி விட்டு, திமுகவின் தில்லு முல்லு அம்பலம், ”ஆரிய ஆதிக்கத்தை வேரறுப்போம் என்று பாஜகவை விமர்சித்து இருக்கிறது திமுக திருடர் கூட்டம்.
சமீபமாக தமிழக இந்து மக்களுக்கு திமுக என்ன செய்தது என்று மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் பேசுகின்றனர். ஆனால், இது போன்று பேச வேண்டிய அவசியம் இதற்கு முன்பு திமுகவுக்கு இருந்ததில்லை. இப்படி பேசுவது எதிர்காலத்தில் திமுகவுக்கு சாதகம் தானா? அல்லது பாஜகவுக்கு சாதகமா? என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இதுகுறித்து திமுக தலைமை புதிய உத்தரவு ஒன்றை குடும்ப அரசியலுக்கு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும், தமிழக மக்களை ஏமாற்ற 1,500 பிரசார தி.மு.க கூட்டங்களை நடத்த உள்ளது. கட்சியின் பிரபலங்கள் பங்கேற்கும் பிரசாரத்தில், ‛இந்து மதத்துக்கு எதிரான கருத்துகளை பேச கூடாது. அவமதிக்கும் செயலில் ஈடுபட கூடாது' என கட்சி மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. அத்துடன், இந்துக்கள் அதிகமுள்ள இடங்களில், தி.மு.க.,வோ, அதன் தலைவர்களோ, இந்து மதத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை நிருபித்து பேசவும் உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
தற்போது சாதியை காட்டி மதத்தை கூறி திமுக வெற்றி பெற வேஷம் போட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் முடியும் வரை நம் (திமுக தில்லு முல்லு கூட்டம்) இந்துக்களின் ஓட்டை எப்படியவது நாம் பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இறங்கி வந்து உள்ளது, திமுகவின் கபட நாடகத்தை இந்துக்கள் புரிந்து கொள்ளுவார்களா? இல்லையா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
AthibAn Tv