சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பச்சையப்பன் என்பவரின் மகள் பிரியா (27). இவர் தாம்பரம் சி.டி.ஓ காலணியைச் சேர்ந்த மருத்துவர் தீபக் (28) என்பவரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம்போல் பணி நிமித்தமாக காலையில் அந்த வீட்டிற்கு பிரியா சென்றுள்ளார். அப்போது தனியாக இருந்த அவரை தீபக் தனது உறவினர் ஆனந்த் அமிர்ராஜ் (34) என்பவருடன் சேர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் இதுபற்றி வெளியே கூறினால் வீட்டில் நகை திருடிவிட்டதாகக் கூறி போலிசாரிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்றும் மருத்துவர் தீபக் மிரட்டியதாக பிரியா தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தாம்பரம் போலீசார் இதுகுறித்து தீபக் மற்றும் அவரது உறவினர் ஆனந்த் அமிர்ராஜ் இருவரையும் அழைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், நடந்த உண்மைகளை இருவரும் ஒப்புகொண்டதை அடுத்து, காவல்துறையினர் அவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
AthibAn Tv