தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார். “ ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளை பெரிய பொதுக்கூட்டத்துடன் கொண்டாடுவோம். ஆனால், கொரோனா காலம் என்பதால் முடியவில்லை. மேலும் மக்களுக்கு நாம் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசின் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து விதிகளுக்கு உட்பட்டு கொண்டாடுகிறோம். கொரோனாவை தடுப்பதிலே கட்டுப்பாட்டோடு நடக்கும் கட்சி தமாகாதான்.
தடுப்பூசி வரும் வரை நாம் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 4 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ளது. இன்று தமாகா வெற்றிபெறும் நிலையில் உள்ளது. கூட்டணி தர்மத்தை நாம் கடைப்பிடித்து கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்துவோம். நம் பலத்துக்கு ஏற்ப வேட்பாளர்களைப் பெற்று நம்முடைய வெற்றிக்கும் கூட்டணியின் வெற்றிக்கும் பாடுபடுவோம்.” என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
AthibAn Tv