கொரோனா காலத்தில் ஒப்பந்தம் செய்த 55 புதிய திட்டங்களால் தமிழகத்தில் உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை முதலமைச்சர் வாழும் காமராஜர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
“சோதனை மிகுந்த கொரோனா காலத்தில் கூட தமிழகத்தில் 55 புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதன் மூலமாக ரூ.40 ஆயிரத்து 718 கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டு, 74 ஆயிரத்து 212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு முதலமைச்சர் வாழும் காமராஜர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
AthibAn Tv