Type Here to Get Search Results !

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை



சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது.

தமிழகத்தில்  வடகிழக்கு பருவ மழை துவங்கியது. சென்னையில் நேற்று பகல் பொழுதில் மேகமூட்டம், லேசான சாரல் மழை பெய்த நிலையில், நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

விடிய விடிய பெய்த மழை காரணமாக, சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இந்நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom