அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும், என திண்டுக்கல்லில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிகண்டனை, வி.சி.க.,வினர் தாக்கியதில் காயமடைந்தார். அவரை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பார்க்க வந்தார்.
பின் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் திருமாவளவன் செயல்பட்டு வருகிறார். நல்லாட்சியை விரும்புபவர்கள் பா.ஜ.,வில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க., கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி வருகிறது.
தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எழுச்சிப்பெறும். அது 234 தொகுதியிலும் வெல்லும். ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறார். அவர் வழி தனி வழி என்பதால் பா.ஜ.,வுடன் இணைய வேண்டிய அவசியம் இல்லை. ரஜினிக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. அவர் வருகையால் அனைத்து கட்சிகளின் கூடராமும் காலியாகி விடும்'. இவ்வாறு அவர் கூறினார்.
AthibAn Tv