இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று காலமான கேசுபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வந்தார். ஆமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து காந்திநகர் சென்ற மோடி, அங்கு நேற்று காலமான முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான பா.ஜ., முன்னாள் எம்.பி., இசையமைப்பாளருமான மகேஷ் கனோடியா மற்றும் நரேஷ் கனோடியாவின் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்தினார்.
AthibAn Tv