இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சர்தார் படேலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்திவருகின்றனர்.
பட்டேல் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றடைந்த பிரதமரை முதலமைச்சர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் வரவேற்றனர்.
இன்று நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்திற்கு சென்ற மோடி, அங்கு பட்டேல் சிலைக்கு (ஒற்றுமைக்கான சிலை) மரியாதை செலுத்தினார். அங்கு தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நடைபெற்றது. இதனை பிரதமர் பார்வையிட்ட பிரதமர் மோடி அதன் பிறகு உரையாற்றினார்.
தனது உரையில் தமிழ் கவிஞர் பாரதியாரின் கவிதைகளை குறிப்பிட்டார் :- மன்னும் இமயமலை எங்கள் மலையே;
மாநிலமீததுபோல் பிறிதில்லையே!
இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே;
இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?
பன்னரும் உபநிட நூல்எங்கள் நூலே;
பார்மிசை ஏதொரு நூலிது போலே!
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே;
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே! என எந்த வித குறிப்பையும் பார்க்காமலும் துண்டு சீட்டு இல்லாமலும் உரையாற்றினார்.
திமுக துண்டு சீட்டு ஸ்டாலின் போட்டியில் பங்கேற்பாரா குறிப்பையும் பார்க்காமலும் துண்டு சீட்டு இல்லாமலும் உரையாற்றினார் செய்த பிரதமர் pic.twitter.com/nbMZEzR06S
— AthibAn Tv (@AthibAntv) October 31, 2020
பிரதமர் மோடியின் தாய் மொழி குஜராத்தி அப்படி இருக்கையில் தமிழ் கவிதையை எந்தவித பிழையும் இன்றி துண்டு சீட்டு குறிப்புகள் ஏதும் இல்லாமல் முழு கவிதையும் கூறியிருப்பது ஆச்சர்யத்தை வரவைத்துள்ளது, இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலினை குறிப்பிட்டு பாஜகவினர் கிண்டல் செய்து வருகின்றனர்.
தமிழ் தெரியாத பிரதமர் மோடி பாதிரியார் கவிதைகளை பிழையில்லாமல் துண்டு சீட்டு இல்லாமல் குறிப்பிட்டு பேசியுள்ளார், நீங்களும் இதே கவிதையை அல்லது வேறு ஒரு பாதிரியார் கவிதையை துண்டு சீட்டு இல்லாமல் பேசமுடியுமா என சவால் விடுத்து வருகின்றனர். எப்போதெல்லாம் பிரதமர் திருக்குறள் அல்லது தமிழ் இலக்கியங்களை சுட்டிக்காட்டி பேசுகிறாரோ அப்போதெல்லாம் இதுபோன்று ஸ்டாலின் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார்.
இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஸ்டாலின் ஏதேனும் ஒரு பாதிரியார் கவிதையை பிழையில்லாமல் பேசி விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் இனியும் ஓடி ஒழிய கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது, பிரதமர் தமிழ் இலக்கியங்கள், திருக்குறள், தற்போது பாதிரியார் கவிதைகள் என சுட்டிக்காட்டி சிறப்பான சம்பவங்கள் செய்துவரும் வேலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மறைமுகமாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறார்.
AthibAn Tv