Type Here to Get Search Results !

சர்தார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை : 17 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்



சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

கொரோனா பரவல் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று (அக்.,30) சென்றார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் நர்மதை மாவட்டத்தின் கெவாடியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் 17 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


புதிய படகு வழித்தடம், புதிய கோரா பாலம், கருடேஸ்வர் அணை, அரசு குடியிருப்புகள், பேருந்து நிறுத்தம், ஒற்றுமை நர்சரி, கல்வானி சுற்றுச்சூழல் சுற்றுலா, பழங்குடியின விடுதி போன்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஒற்றுமை படகு சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்நிலையில், இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த 'ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்' அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பெண் ராணுவ கமாண்டோக்களின் மிடுக்கான அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom