தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று நிறைவடைந்த நிலையில் மேலும் தளர்வுகளுடன் நவ.30 வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நவ. 16-முதல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக். 31 நள்ளிரவு 12:00 மணி வரை அமலில் இருக்கும் என கடந்த மாதம் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.அதன்படி ஊரடங்கு இன்று இரவு நிறைவடைகிறது.
ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் இன்று ஆலோசனை நடந்தது. அவர்கள் கூறிய கருத்துக்கள் அடிப்படையில் தமிழக அரசு இன்று மேலும் சில தளர்வுகளுடன் நவ. 30 வரை ஊரடங்கை நீட்டித்து பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு
* நவ. 16-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பள்ளிகள் திறக்க அனுமதி.
* நவ.10-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் வணிக வளாகங்கள், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் மற்றும் தியேட்டர்கள் திறக்க அனுமதி.
* மதம் சார்ந்த கூட்டங்கள், கலாச்சார ,பொழுது போக்கு நிகழ்ச்சிகள், திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்லாம்.
* நவ. 16 முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்விநிறுவன விடுதிகள் அனைத்தும் திறக்க அனுமதி.
* புற நகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவைகள் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி செயல்பட அனுமதி.
* சின்னத்திரை மற்றும் திரைப்பட படிப்பிடிப்புகளில் 150 பேர் வரை பங்கேலாம்.
* பொழுது போக்கு பூங்காங்களும் திறக்க அனுமதி.
*கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு இ. பதிவு முறை தொடர்ந்து அமல்.
*சென்னை கோயம்பேட்டில் நவ. 2, 3 தேதிகளில் வியாபாரம் செயல்பட அனுமதி.
பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
AthibAn Tv