திண்டுக்கல் மாவட்டத்தில் சுவர் விளம்பரம் செய்வதில் பாஜக மற்றும் திமுகவினர் இடையே ஏற்பட்ட சிறிய கைகலப்பு தற்போது மாவட்ட அளவில் கடும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் பாஜக பிரதமரின் சாதனைகளை முன்னிறுத்தி விளம்பரம் மற்றும் தெருமுனை பிரச்சாரங்களை செய்ய முடிவெடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் செய்தது, பாஜக செய்த விளம்பரங்களின் மீது திட்டமிட்டு திமுகவினர் அதே இடத்தில் விளம்பரம் செய்ததால் இரண்டு தரப்பிலும் மோதல் உண்டானது.
சமீபத்தில் நங்கநல்லூரில் பாஜக திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அதே போன்று தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது, பாஜகவினர் விளம்பரத்தின் மீது திட்டமிட்டு திமுகவினர் விளம்பரம் செய்வதாக கூறியும் அதனை அகற்ற கோரியும் பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் பாஜக திமுக மோதல்
அதே இடத்தில் திமுகவினரும் கூடியதால் பதற்றம் அதிகரித்தது, அங்கு பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறை பாஜகவினரை கலைந்துபோக கூறிய நிலையில் சுவர் விளம்பரத்தை அகற்றினால் மட்டுமே கலைந்து செல்வோம் என பாஜகவினர் கூறினர் இதனையடுத்து சிறிது நேரத்தில் பாஜகவினர் அந்த விளம்பரத்தை கிழித்து அகற்றினர்.
இதையடுத்து பதற்றம் அதிகரிக்க இரு தரப்பு இடையே மோதல் உண்டானது, திட்டமிட்டு பாஜகவினர் செய்யும் விளம்பரங்களின் மீது திமுகவினர் சுவரொட்டிகளை ஓட்டுவதே இது போன்ற மோதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது, தொடர்ந்து பாஜக திமுக என மோதல்கள் தொடர்ந்து மாறிவருவது பாஜக தமிழகத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதை குறிப்பிடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
AthibAn Tv