கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாயும் காவல் ஆய்வாளரின் கணவர் உள்பட பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளியூரை சேர்ந்த ஆண்கள் வந்து சென்றுள்ளனர். இந்த வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்ததையடுத்து, போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். இந்த நிலையில், நேற்று மாலை தக்கலை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர் அப்போது , வீட்டில் இரண்டு தனித்தனி அறைகளில் பெண்களுடன் இருந்த ஆண்கள் இரண்டு பேர் தப்பி ஓட முயன்றனர் . போலீஸார் அவர்களை சுற்றி வளைத்த பிடித்தனர்.
பிடிபட்டவர்களில் ராஜ்மோகன் என்பவர் வீரவ நல்லூர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளரின் கணவர் என்பதும் மற்றோருவர் தக்கலை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுனில் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக லதா என்ற பெண்ணும் பிடிபட்டார். இவர், தன் சொந்த மகள்கள் மூன்று பேரையும் ஆடம்பரமாக வாழலாம் என்று ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.அதோடு, தன் மகளின் தோழி ஒருவரையும் இந்த தொழிலில் ஈடுபடுத்தி பாதகம் செய்துள்ளார்.
இதையடுத்து விபாரத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தக்கலை டி.எஸ்.பி கூறுகையில், '' நான்கு பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. சிறுமிகளிடம் பாலியல் ரீதியிலான தொடர்பில் இருந்த பல ஆண்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல முக்கிய நபர்கள் சிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
AthibAn Tv