Type Here to Get Search Results !

மாற்றம், சீர்திருத்தம் போன்ற மந்திரங்கள் மூலம் இந்தியா பயணம்: மோடி



மாற்றம், சீர்திருத்தம் போன்ற மந்திரங்கள் மூலம் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பாடுபடுகிறோம் என பிரதமர் மோடி கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது: மாற்றம் சீர்திருத்தம் போன்ற மந்திரங்கள் மற்ற நாடுகளுக்கும் பலனளிக்க கூடியது. 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்தியா இலவசமாக மருந்துகளை வழங்கி உள்ளது. கிராமப்பகுதிகளில் 150 மில்லியன் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கி உள்ளது. ஆப்டிக்கல் பைபர் மூலம் இணையதள வசதியும் பரவலாக்கப்பட்டுள்ளது.

சுயசார்பு கொள்கையை முன்னெடுப்பதன் மூலம் பெண்கள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறோம். இந்திய பெண்கள் தான் உலகின் சிறந்த மைக்ரோ பொருளாதாரத்தை முன்னெடுக்கிறார்கள். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இந்த உலகத்தை நாங்கள் குடும்பமாக கருதுகிறோம். இது எங்களின் கலாசாராம். ஐ.நா.,வில் இந்தியா அதை தான் எதிரொலிக்கிறது. இந்தியா யாருக்கும் எப்போதும் எதிரியாக இருந்ததில்லை.அதே போல சுயநலத்துடன் சிந்தித்ததில்லை. வளமான திசையை நோக்கி இந்தியா பயணிக்கிறது. அனைத்து மதங்களையும் உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom