மூன்று வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்ததாக முதல்வர் இபிஎஸ் விளக்கமளித்துள்ளார்,
பார்லியின் இரு அவைகளிலும் விவசாயம் தொடர்பாக மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் லோக்சபாவில் மசோதாவை ஆதரித்த அதிமுக, ராஜ்யசபாவில் எதிர்த்தது. ராஜ்யசபாவில் அதிமுக எம்பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் வேளாண் மசோதாவை எதிர்த்துப் பேசினார். அதிமுக.,வின் இந்த இரட்டை நிலைக்கு திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி முதல்வர் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மூன்று வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு தெரிவித்தது. ராஜ்யசபாவில் வேளாண் மசோதாவை எதிர்த்து பேசியது குறித்து எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
AthibAn Tv