Type Here to Get Search Results !

அதிருப்தி தெரிவித்துள்ள சசிகலா! சிறையில் உள்ள சூழலில் எழுதியுள்ள முக்கியமான கடிதம்



தனது அதிருப்தியை வெளிப்படுத்தி சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் வி கே சசிகலா விடுதலை தொடர்பான கேள்விகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு ஜனவரி 21ஆம் திகதி சசிகலா விடுதலை ஆவார் என பெங்களூர் சிறை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தன்னுடைய சிறைவாசம் விடுப்பு மற்றும் விடுதலை குறித்த விவரங்களை மூன்றாவது நபருக்கு தெரிவிக்கக் கூடாது என சசிகலா கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் இந்த கடிதம் தன்னுடைய வழக்கறிஞர் மூலம் தயார் படுத்தப்பட்டது என்றும் இதில் உள்ள ஆங்கிலத்தில் எட்டக்கூடிய அனைத்து விவரங்களும் தனக்கு தமிழில் விளக்க பட்டுள்ளதாகவும் அது அனைத்தும் சரி எனவும் தான் அறிந்து கொண்டதாகவும் அந்த கடிதத்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom