நாடாளுமன்ற கூட்ட தொடர் கடந்த 14-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது, இக்கூட்ட தொடரில் பல்வேறு மசோதாக்கள் மீது விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது, இந்நிலையில் திமுக எம்.பி-கள் வழக்கம்போல் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் பேசிவருகின்றனர்.
அதன் எதிரொலியாக திமுக எம் பி தயாநிதி மாறன் நேற்று ஆக்ரோஷமாக பேசினார், சங்கிகள் விளக்கு ஏற்ற சொன்னால் வெடி வெடிக்கிறார்கள், மருத்துவர்களை காக்க வைக்கிறார்கள், கொரோனா குறித்து எந்த ஒழுங்கான நடவடிக்கையும் பிரதமர் எடுக்கவில்லை, எதிர்க்கட்சிகள் சொன்னதை இந்த அரசு காதில் வாங்கி கொள்ளவில்லை, நிதி அமைச்சகம் தொடங்கி பிரதமர் வரை அனைவரையும் விமர்சனம் செய்தார்.
போகிற போக்கில் தப்லீக் ஜமாத் மாநாடு மூலம் முஸ்லிம்கள் கொரோனவை பரப்பினார்கள் என குற்றம் சுமத்தியது மத்திய அரசு இப்போது என்ன நடந்தது என பேசியிருந்தார், இந்த சூழலில் 30 நிமிடங்களுக்கு மேல் காட்டு கத்தாக கத்தி எதிர்ப்பை பதிவு செய்தார் தயாநிதி, அதற்கு அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரானா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும், இதனால் விரைவில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தனது உரையில் பேசினார், அத்துடன் தயாநிதி மாறன் திட்டமிட்டு முஸ்லீம் நபர்கள் மீது பாஜக குற்றசாட்டு சுமத்தியதாக கூறி இந்து முஸ்லீம் மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாகவும் உடனடியாக அவரது கருத்தை வாபஸ் பெறவேண்டும் எனவும் ரவீந்திரநாத் அவையில் தெரிவித்தார்.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் முஸ்லிம்களை தூண்டி விட்டு மத அரசியல் செய்வதை நிறுத்தி கொள்ளுங்கள் என ஒரே வார்த்தையில் திமுக எம் பி தயாநிதி மாறனுக்கு பதில் அளித்துள்ளார், தொடர்ந்து ரவீந்திரநாத் குமார் தனியாளாக திமுக உறுப்பினர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார், ஆனால் திமுக எம் பி கள் அவையில் பேசும் வீடீயோக்களை முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பும் தமிழக ஊடகங்கள் அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் பேசும் வீடீயோக்களை ஒளிபரப்புவதில்லை .
AthibAn Tv