ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி பற்றி பிரதமர் மோடி பேசியதற்கு, உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துஉள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை எனப்படும், ஐ.நா., சபையின், 75ம் ஆண்டு பொதுச் சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில், பிரதமர் மோடி, நேற்று முன்தினம் பேசினார்.
அப்போது, 'உலகில், தடுப்பூசிகளை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. அதன் சார்பில், உலக சமூககத்துக்கு ஒரு உறுதியை வழங்குகிறேன். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு, அனைத்து மனிதர்களுக்கும் உதவ, இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோக திறன் முழுமையாக பயன்படுத்தப்படும்' என்றார்.
பிரதமர் மோடியின் இந்த வாக்குறுதிக்கு, உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியாசிஸ், 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளதாவது:
ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், தடுப்பூசி குறித்து, இந்திய பிரதமர் மோடி அளித்துள்ள வாக்குறுதிக்கு, என் நன்றி. நம் வளங்கள் மற்றும் திறமையை ஒன்றாக திரட்டி பணியாற்றினால் தான், கொரோனா தொற்றுக்கு முடிவு காண முடியும்.இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.
AthibAn Tv