'எல்லையில், பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது' என, சீனாவிடம், இந்தியா தெரிவித்துள்ளது,
லடாக் எல்லையில்அமைதியை ஏற்படுத்த, இந்தியா - சீனா இடையே, ராணுவ கமாண்டர்கள் அளவில், ஆறாம் சுற்று பேச்சு, சமீபத்தில் நடந்தது. இது குறித்து, வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா நேற்று கூறியதாவது:
ராணுவ கமாண்டர்கள்அளவில் நடந்த ஆறாவது சுற்று பேச்சில், லடாக் எல்லையிலிருந்து படைகளை வாபஸ் பெறுவது பற்றி தான், முக்கியமாகப் பேசப்பட்டது. மேலும், 'எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது; எல்லையில் இப்போதுள்ள நிலையை மாற்றவும் முயற்சிக்கக் கூடாது' என, சீனாவிடம் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.
AthibAn Tv