Type Here to Get Search Results !

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்! நீதிமன்றம் உத்தரவு



ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் பேரறிவாளன் இருக்கும் புழல் சிறையில் கொரோனா பரவி வருவதால் அவருக்கு பரோல் வழங்க அவரின் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் விதிகளை தளர்த்தி பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom