பிரதமர் மோடி ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னர் பலமுறை யோசிப்பார், ஆனால் முடிவு எடுத்த பிறகு யோசிக்கமாட்டார் என்று அவருடன் நெருங்கி பழகிய அரசு ஊழியர்கள் சொல்லி கேட்டிருக்கலாம் அதனை நேரில் பார்த்துள்ளார் மத்திய கேபினட் அமைச்சர் பதால்.
பிரதமர் மோடிக்கு செக் வைக்க போய் அவர் திரும்ப வைத்த செக்கில் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார் அகாலிதள எம்.பியும் மத்திய அமைச்சராக பதவி வகித்த ஹர்ஷிமிரத் பாதல், வேளாண் மசோதாவால் தன் குடும்பத்துக்கு வரும் வருட வருமானம் 5000 கோடி வருமானம் போய்விடுமே என்று எண்ணிய அமைச்சர் மத்திய அரசை மிரட்ட ராஜினாமாவை அறிவித்தார்.
ராஜினாமாவை அறிவித்த பின் பிரதமரை சந்திக்க டைம் கேட்டார். பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக நேரம் ஒதுக்கப்பட்டது.பிரதமரை சந்தித்த அமைச்சர் ஹர்ஷிமிரத் பாதல் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் கடிதத்தை வாங்கிய பிரதமர் படித்த உடன் ஏற்றுக்கொண்டேன் (Accepted) என்று கடிதத்தில் எழுதிவிட்டு அமைச்சரின் முகத்தை பார்த்து நமஸ்கார்ஜி என்று கூறினார்.. இது நடந்தது வெறும் ஒரு சில நிமிடங்கள்தான்.
அமைச்சர் பதவி போன ஷாக்கிலிருந்து வெளியே வந்த அமைச்சர் பத்திரிகையாளர்களிடம் NDA அரசுக்கு எங்கள் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்தார், பதால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அடுத்த 30 நிமிடங்களுக்குள் அமைச்சர் என்ற முறையில்அவருக்கு அளிக்கப்பட்ட வீடு மற்றும் வசதிகள் ஒரு வாரத்துக்குள் திரும்பப் பெறப்படும் என்ற கடிதமும் அவருக்கு கிடைத்தது.
இந்நிலையில் நான் ராஜினாமா செய்ய போகவில்லை பிரதமருடன் வேளாண் மசோதா பற்றி பேசத்தான் போனேன், அவர் ராஜினாமா செய்ய வேண்டாம் என கூறுவார் என அதிகம் எதிர்பார்த்தேன் என்று வேறு அமைச்சரிடம் புலம்பியிருக்கிறார் ஹர்ஷிமிரத் பாதல்.
வழக்கமாக திமுக உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் மத்திய அரசை சரமாரியாக விமர்சனம் செய்துவிட்டு, தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்தித்து மன்னிப்பு கேட்காத குறையாக மன்றாடுவது வழக்கம் அதே பாணியில் பதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பூஜாண்டி காட்டினார் ஆனால் மோடியோ விவசாயிகள் நலன்தான் முக்கியம் கூட்டணி இல்லை என ஒரே முடிவாக பாதலுக்கு முடிவு கட்டிவிட்டார்.
AthibAn Tv