காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டத்தில், ஷிர்ஹமா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பயங்கரவாதிகள் யாரும் பதுங்கியுள்ளனரா என்பதை கண்டறிய பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
AthibAn Tv