வீடு மற்றும் சில்லறை கடன்களுக்கான தவணை தொகையை திருப்பி செலுத்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வீட்டு கடன், வாகனக்கடன் என அனைத்து கடன்கள் பெற்றவர்கள், கடனை திருப்பி செலுத்துவதற்கு மேலும், இரண்டு ஆண்டு அவகாசம் அளிக்கப்படுகிறது. மார்ச் 1ம் தேதிக்கு முன்பாக கடன் பெற்றவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். டிச., 31 வரை இதற்காக விண்ணப்பிக்கலாம். எஸ்.பி.ஐ., வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, பின்னர், சம்பந்தப்பட்ட வங்கிக்கிளைக்கு நேரில் சென்று கடன் தவணை கால அவகாசத்தை நீட்டித்து கொள்ளலாம். இந்த 2 ஆண்டு கடன் சீரமைப்பு திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளரிடம், ஆண்டுக்கு கூடுதலாக 0.35 சதவீத வட்டி வசூலிக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்ற சலுகை திட்டத்தை ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் விரைவில் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது
AthibAn Tv