Type Here to Get Search Results !

டிக்டாக் செயலியின் தலைமை செயல் அதிகாரி திடீர் ராஜினாமா




டிக்டாக் செயலியின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து கெவின் மேயர், ராஜினாமா செய்துள்ளதாக சீன நிறுவனமான பைட் டான்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தேச பாதுகாப்பு கருதி, டிக்டோக் நிறுவனம், பைட் டான்சுடன் எந்தவொரு தகவலையும் பகிர கூடாதென டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கடந்த 7ம் தேதி கையெழுத்திட்டார். இந்த உத்தரவு செப்., 20ம் தேதி அமலுக்கு வரவுள்ளது. மேலும் டிக்டாக் நிறுவனத்தின் சொத்துக்களை, 90 நாட்களுக்குள் விற்க கெடு விதித்து, அதிரடி உத்தரவும் பிறப்பித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு எதிராக டிக்டாக் ஊழியர் ஒருவர் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், டிக்டாக் நிறுவன சி.இ.ஓ கெவின் மேயர் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'கனத்த இதயத்துடன் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார். டிக்டோக் பொது மேலாளர் வனேசா பப்பாஸ், கெவின் மேயருக்கு பதிலாக இடைக்கால சி.இ.ஓ.,வாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் கெவின் மேயர், சீனாவை தலையிடமாக கொண்ட பைட் டான்ஸில் நிறுவனத்தின் டிக்டாக் செயலியின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அதற்கு முன்னதாக டிஸ்னி நிறுவனத்தின் நீண்ட காலமாக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். டிஸ்னி நிறுவனத்தில் நுகர்வோர் சேவை மற்றும் சர்வதேச வர்த்தக பிரிவின் தலைவராக பணியாற்றியவர் என டிக்டாக் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom