Type Here to Get Search Results !

சிரியாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் பாகிஸ்தானியர்கள்




சிரியாவில் கைதான பயங்கரவாதிகளில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தானியர்களிடம் அமெரிக்கா விசாரணையை துவக்கி உள்ளது.

அமெரிக்க ஆதரவு சிரிய குர்து ஜனநாயக படையினர் பிடித்து வைத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளில் 29 பேர் பாகிஸ்தானியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் நான்கு பாக் பயங்கரவாதிகள் துருக்கி, சூடான் உள்ளிட்ட மற்ற நாடுகளின் குடியுரிமையை பெற்றுள்ளனர். மேலும் இந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் அல் கொய்தா அல்லது பாக்கில் இயங்கும் மற்ற அடிப்படைவாத குழுக்களுடனும் தொடர்பு உள்ளதா என்று அமெரிக்கா விசாரணையை துவங்கி உள்ளது.

இதன் மூலம் லஷ்கரே தொய்பா, ஜெய்ஷே முகம்மது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் பாக்.கில் இருந்து இயங்குவதால் பாக்., பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக இருக்கிறது என்ற இந்தியாவின் வாதமும் நிரூபணமாகி உள்ளது. இந்நிலையில் பயங்கரவாத செயல்களுக்கு பணம் போடுவதை தடுக்கும் FATF அமைப்பின் சந்தேக பட்டியலில் இருந்து வெளியேற முயற்சிக்கும் பாக்.கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom