Type Here to Get Search Results !

பாஜகவில் இணைந்த அண்ணாமலாயிடம் ஊடகங்கள் பல கேள்விகளைக் கேட்கின்றனவா ..? ஏன் ஸ்டாலினிடம் கேட்கக்கூடாது ..?



உதயநிதி திமுக இளைஞர் அணி மாநில செயலாளராக அறிவிக்கப்பட்ட போது திராவிட சூரியனே வருக என எந்த செய்தியாளர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றார்களோ தற்போது அதே பத்திரிகை துறையை சேர்ந்த நபர்கள் இன்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் IPS அதிகாரியை கார்னர் செய்த விதம் பெரும் சலசலப்பை பாஜகவினர் இடையே உண்டாக்கியுள்ளது.

முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, இன்று அவருக்கு கோவை மாநகர பாஜக சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது, இதில் கலந்து கொண்ட அண்ணாமலையை கார்னர் செய்ய முடிவெடுத்த சில பத்திரிகையாளர்கள், நீங்கள் RSS மூலம் IPS தேர்ச்சியானவரா, தற்சார்பு பொருளாதாரம் என கூறிவிட்டு, ஆடப்பர நட்சத்திர ஹோட்டலில்தான் சாப்பிடுவீர்களா என கேள்வி எழுப்பினர்.

பிரஸ் மீட் நிகழ்ச்சியில் திட்டமிட்டு அண்ணாமலையை கார்னர் செய்த செய்தியாளர்கள் இடையே பாஜக மூத்த நிர்வாகி SR சேகர் கடும் ஆட்சேபனையை தெரிவித்தார், இதற்கு முன்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு 1 நிமிடத்தில் நச்சென்று புரியும் படி பதிலடி கொடுத்தார் அண்ணாமலை, அதில் நான் எந்த நட்சத்திர ஹோட்டலுக்கும் இதுவரை என் வாழ்வில் சென்றதில்லை, என்னை RSS தான் IPS தேர்வில் வெற்றி பெற்றதாக சிலர் கூறி வருகிறார்கள்,

நான் 2011 IPS பேட்ச் அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ், சொல்லுங்கள் எப்படி நடந்திருக்கும், இப்போது ஒன்றை குறித்து வைத்து கொள்ளுங்கள், குப்பைகளை சிலர் திட்டமிட்டு எங்கள் மீது வீசினாலும் அதனை கீழே போட்டு தாமரை மலரும் மலரவைப்போம் என அதிரடியாக தனது கருத்தினை அண்ணாமலை பதிவு செய்தார்.

தானாக சுயமாக தேசிய கட்சியான பாஜகவில் இணைந்த அண்ணாமலையிடம் இத்தனை கேள்வி கேட்கும் ஊடகங்கள், இது போன்று ஏன் எந்த செய்தியாளர் சந்திப்பிலும் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்பது இல்லை இதிலிருந்தே தமிழக ஊடகங்களின் பாதை தெளிவாக தெரிகிறது என பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom