Type Here to Get Search Results !

"லண்டனில் தொடங்கும் வேட்டை" - விரைவில் வெளியாகும் துப்பறிவாளன் 2 அப்டேட்..?


கடந்த 2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் மற்றும் பிரசன்ன நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் துப்பறிவாளன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு லண்டனில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து மிஷ்கின் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு தகவல் வெளியானது. 

அதன் பிறகு, விஷால் தயாரித்து நடித்து வந்த இந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகமானதால் மிஷ்கின் படத்திலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாகத் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த செய்தி வெளியான நிலையில் விஷால் மற்றும் மிஸ்கின் இடையே மிகப்பெரிய வார்த்தை போர் வெடித்தது. இந்த நிலையில் எஞ்சியுள்ள திரைப்படத்தை நடிகர் விஷாலே இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.  

மேலும் விஷால் மற்றும் மிஸ்கின் இடையே சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தகவலும் வெளியானது. இந்நிலையில் பிரபல சினிமா PRO திரு. டைமண்ட் பாபு அவர்கள் வெளியிட்ட பதிவில் விரைவில் துப்பறிவாளன் 2 குறித்த அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom