மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா, டில்லியில் வசித்த அரசு பங்களாவை காலி செய்தார்.
காங்., தலைவர் சோனியாவின் மகளும் காங்., பொதுச்செயலருமான பிரியங்காவுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு படையின் பரிந்துரைப்படி, 1997ல் பிரியங்காவுக்கு, டில்லியில், லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டது.
இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கபட்டவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்புக்கான இடத்தில் தங்க அனுமதிக்க இயலாது. பங்களாவை ஜூலை 31க்குள் காலி செய்யுமாறும், வாடகை நிலுவை, ரூ.3.26 லட்சத்தை செலுத்துமாறும், மத்திய உள்துறை அமைச்சகம், பிரியங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து இன்று பங்களாவைவில் இருந்து பிரியங்கா வெளியேறினார். சிறிது காலம் ஹரியானா மாநிலம் குருகிராமில், செக்டார் 42 ல் டிஎல்எப் அராலியாவில் உள்ள வீட்டில் தங்கியிருப்பார் என கூறப்படுகிறது.
AthibAn Tv