Type Here to Get Search Results !

எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்; மூன்று இந்திய வீரர்கள் வீரமரணம்!



மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சந்தெல் மாவட்டம் மியான்மர் நாட்டின் எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் அசாம் ரைபிள்ஸ் யூனிட் என்ற துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் பீப்பிள் லிபரேஷன் ஆர்மி என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது மணிப்பூரில் இருக்கும் மூன்று பிரிவினைவாத அமைப்புகளில் ஒன்றாகும். கடந்த 1978ஆம் ஆண்டு என்.பிஷேஸ்வர் சிங் என்பவரால் பீப்பிள் லிபரேஷன் ஆர்மி உருவாக்கப்பட்டது.

இவர்கள் மணிப்பூரை தனி சோசியலிஸ்ட் நாடாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்திய ராணுவத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அசாம் ரைபிள்ஸ் யூனிட் படைப் பிரிவினர் மீது பீப்பிள் லிபரேஷன் ஆர்மி இன்று காலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. முன்னதாக கையெறி குண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு ரைபிள்ஸ் யூனிட்டும் பதில் தாக்குதல் தொடுத்தது. இதுபற்றி தகவலறிந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இம்பாலில் இருந்து கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன.

இந்த சூழலில் அசாம் ரைபிள்ஸ் யூனிட்டைச் சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் மணிப்பூர் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom