படப்பிடிப்பே பாதி தான் நிறைவடைந்துள்ள நிலையில், ‘அண்ணாத்த' படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் ஒரு கதை பரவிவருகிறது.
‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்தின் 168-வது திரைப்படமாக, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த'. இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவை கையாளுகிறார். ரஜினிகாந்த்தின் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் இதனை மூன்றாவது படமாக தயாரித்த்வருகிறார்.
கொரோனா வைரஸ் தோற்று தீவிரம் அடைந்துவரும் காரணத்தால், ஆரம்பத்தில் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக திட்டமிடப்பட்ட ‘அண்ணாத்த' திரைப்படம், பின்னர் 2021 பொங்கல் வெளியீட்டிற்கு தள்ளப்பட்டது. இப்போது, அப்படம் மேலும் முன்னோக்கி தள்ளப்படலாம் மற்றும் 2021 பொங்கலுக்கு வெளியிடப்படாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் இப்போது, இப்படத்தின்கதை இதுதான் என ஒரு புதுக்கதை சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. குடும்ப பொழுதுபோக்கான இப்படத்தில் ரஜினியின் முறைபெண்களாக மீனா மற்றும் குஷ்பு இருவரும் ரஜினியை திருமணம் செய்து கொள்ள ஒருவருக்கொருவர் போட்டியிடுவார்கள். இருப்பினும், அவர் இருவரையும் ஏமாற்ற விரும்பவில்லை என்பதால், அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அது அநேகமான நயன்தாராவாக இருக்கலாம். அவர்களுக்கு மகளாக கீர்த்தி சுரேஷ் பிறக்க, பின்னர் மீனா மற்றும் குஷ்பூவின் கதாபாத்திரங்கள் கீர்த்தியை தங்கள் மருமகளாகப் பெறுவதற்காக ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றன. இறுதியில், கீர்த்தியை மருமகளாக யார் பெறுகிறார்கள் என்பது படத்தின் க்ளைமாக்ஸை உருவாக்குகிறது. இந்த படத்தில் சூரி மற்றும் சதீஷ் நகைச்சுவை பகுதியை கையாளுவார்கள், பிரகாஷ் ராஜ் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை செய்வார் என பேசப்படுகிறது.
‘அண்ணாத்த' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு 2021-ல் தான் மீண்டும் தொடங்கப்படலாம் என்று தெரிகிறது. படக்குழு உறுப்பினர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இதன் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதி வரை ஒத்திவைக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
AthibAn Tv