Type Here to Get Search Results !

ராணுவ ஒப்பந்த ஊழல் வழக்கு: ஜெயா ஜெட்லிக்கு டில்லி ஐகோர்ட் 4 ஆண்டு சிறை



ராணுவ ஒப்பந்தத்தில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக, சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி உள்ளிட்ட 4 பேருக்கு டில்லி ஐகோர்ட் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கடந்த 2001ம் ஆண்டு போடப்பட்ட ராணுவ ஒப்பந்தத்தில் ராணுவத்திற்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கியதில் நடந்த ஊழலை டெகல்கா இணைய தளம் அம்பலப்படுத்தியது.

இதனடிப்படையில் சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த கோபால் பச்சர்வால் மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.பி.முர்கை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. ஜெயா ஜெட்லி உள்ளிட்ட மற்றவர்கள் மீது டில்லி கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

இன்று வெளியான தீர்ப்பில் ஜெயா ஜெட்லி உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து. தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளதாக ஜெயா ஜெட்லி கூறியுள்ளார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom