சர்வதேச விமான சேவை ரத்து வரும் ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, ஆக., 31 வரை, பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச விமான சேவை கடந்த மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டது. அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சர்வதேச பயணிகள் விமான சேவை, ஆக., 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக, வந்தேபாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். சரக்கு விமானங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளது.
AthibAn Tv