கல்வானில் சீனர்களுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் டில்லி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்னை காரணமாக கல்வானில் சீனா மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் நம் நாட்டு வீரர்கள் 20 பேர் வீரமரணம் எய்தினர். இந்த மோதலில் நம் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் சீனா தரப்பில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
இந்திய தரப்பில் பீகார் ராணுவ அதிகாரி பி சந்தோஷ் பாபுவும் வீரமரணம் அடைந்தார். கல்வானில் நடந்த மோதலின் போது சீனர்கள் கற்கள், ஆணிகள் பதிக்கப்பட்ட ராடுகளை கொண்டு நம் வீரர்களை தாக்கினர். நம் நாட்டின் எல்லையை காக்கும் பொருட்டு நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் பெயர்களும் டில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும். இப்பணி சில மாதங்களில் நிறைவடையும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 17ல் கிழக்கு லடாக்கின் லுக்குங் பகுதிக்கு சென்ற மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், சண்டையின் போது வீரமரணம் அடைந்த நம் வீரர்களுக்கு பாராட்டுதல்களையும் வணக்கத்தையும் தெரிவித்தார். கல்வானில் நடந்த சம்பவம் நம் நாட்டு வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் மட்டும் குறிக்கவில்லை ஒட்டு மொத்த 130 கோடி இந்தியர்களின் பெருமையையும் காத்துள்ளது என்று தெரிவித்தார்.
AthibAn Tv