இரு அரிய ரத்தின கற்களை கண்டெடுத்த ஏழை சுரங்கத் தொழிலாளி, திடீரென கோடீஸ்வராக உருவெடுத்துள்ளார்.
தான்சானியா நாட்டின் வடக்கு பகுதிகளில் பல்வேறு சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள சுரங்கம் ஒன்றில் பணியாற்றும் ஏழை தொழிலாளியான சானினியூ குரியன் லைசர் என்பவருக்கு, சுரங்கத்தை தோண்டும் பணியின் போது இரண்டு ரத்தின கற்கள் கிடைத்துள்ளன. மிகவும் அரிதான நீல ரத்தின கற்கள் 9.2 கிலோ மற்றும் 5.8 கிலோ எடையுடன் இருந்தன. இதனை அரசிடம் ஒப்படைத்த அவர், தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார். அரிய ரத்தின கற்களை வழங்கிய லைசருக்கு இந்திய மதிப்பில் 25 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது.
திடீர் கோடீஸ்வரரான லைசருக்கு நான்கு மனைவிகள் உள்ளனர். கற்களால் கோடீஸ்வரரானது குறித்து அவர் கூறியதாவது: இந்த பணத்தை எனது கிராமத்தில் முதலீடு செய்ய உள்ளேன். அங்கு ஒரு ஷாப்பிங் மால் மற்றும் வீட்டின் அருகே ஒரு பள்ளியை உருவாக்க விரும்புகிறேன். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியாத பல ஏழை மக்கள் இங்கு உள்ளனர். நான் படித்தவனல்ல. தொழில்முறை வழியில் இயங்குவதையே நான் விரும்புகிறேன். எனவே எனது குழந்தைகளை தொழில் ரீதியாக நடத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
AthibAn Tv