தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று (ஜூன் 30) ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3856 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 87 பேர். இன்று மட்டும் 30,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 11 லட்சத்து 70 ஆயிரத்து 683 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,378 பேர் ஆண்கள், 1,565 பேர் பெண்கள். மொத்தத்தில் கொரோனா பாதித்த, ஆண்களின் எண்ணிக்கை 55,502 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 34,644 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 21 ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் 90 ஆய்வகங்கள் (அரசு-47 மற்றும் தனியார் 43) உள்ளன. இன்று மட்டும் 2,325 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 074 ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,167ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,327ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,201ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50,074ஆக உயர்வு
AthibAn Tv